இனிமேல் ரஜினி விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் - ராகவா லாரன்ஸ் அதிரடி முடிவு

89645b746e5deab199ee30145a14893b

தர்பார் பட விழாவில் ரஜினிக்கு ஆதரவாகவும், சீமானுக்கு எதிராகவும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்த கருத்துகள் நாம் தமிழர் கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவரின் மொழி, பூர்வீகம் குறித்தெல்லாம் சீமானின் தம்பிகள் கடுமையாக விமர்சித்தனர். மேலும், ரஜினியையும் அவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ‘நான் பேசும் எனது சொந்த கருத்து. அதற்கும் ரஜினிக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என ஏற்கனவே லாரன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இனிமேல் ரஜினி நடிக்கும் திரைப்படங்கள் தொடர்பான விழாக்களில் அவரின் அனுமதியின்றி கலந்து கொள்ளமாட்டேன். இதற்கு பல காரணங்கள் உள்ளது. அதை என்னால் பகிர்ந்து கொள்ள முடியாது. அவரது ஆசீர்வாதத்தை தவிர எனக்கு வேறு எதுவும் பெரிதில்லை’ என தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

 

Related Articles

Next Story