நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேட்டியளித்தபோது ’சிஏஏ சட்டம் அவசியமானது என்றும் இந்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் ஒருவேளை இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதல் ஆளாக நானே குரல் கொடுப்பேன் என்றும் கூறியிருந்தார்
ரஜினியின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஜினி பாஜகவாதியாக மாறிவிட்டதாகவும் கடுமையான விமர்சனம் எழுந்தது
இந்த நிலையில் இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மராட்டியரான ரஜினிகாந்த், தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் நிலை வந்தால் முதலில் குரல் கொடுப்போம்!
ஆளூர் ஷாநவாஸ் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்த்திரை உலகில்…
Actor Ajith:…
Rajinikanth: சூப்பர்ஸ்டார்…
Actor Fahat…
Actor Surya:…