Categories: latest news

ஏன் சும்மா இருக்கணும்னு இதையும் கத்துக்கிட்டேன்.. இளையராஜாவிடம் இருக்கும் இன்னொரு திறமை

இளையராஜா இசை மட்டும் இல்லாமல் பாடல் எழுதவும் முயற்சி செய்திருக்கிறார். கவிஞர் வாலி கூட வெண்பாவை நான் வியக்குற அளவுக்கு வெண்பாவை எழுதுகிறார் இளையராஜா என கூறியிருந்தார். இதை பற்றி இளையராஜா ஒரு பேட்டியில் கூறும் போது இதை எழுத ஆரம்பித்தது கூட தாமதமாகத்தான் ஆரம்பித்திருக்கிறேன். 2000 ஆம் ஆண்டில்தான் எழுத ஆரம்பித்தேன் என இளையராஜா கூறினார்.

வெண்பாவை எழுத நினைத்து ஒன்று எழுதுகிறேன். ஆனால் மனசுல நினைக்கிறது வேறு ஒன்னா இருக்கு. வார்த்தையில் இலக்கண பிழை வருகிறது. இலக்கணப் பிழையை சரி செய்யணும்னா மனசுல நினைக்கிறது வரமாட்டீங்குது. அப்படியே இருக்கும் போது ஒரு கட்டத்தில் ச்சீ என தூக்கிப் போட்டு விட்டேன். 2000 ஆம் ஆண்டில்தான் சரியாக எழுத தொடங்கினேன்.

ரெக்கார்டிங் உள்ள நடக்குது. இந்த இடைவெளியில் மியூஸிக் எழுதி விட்டேன் என்றால் மாலை 7.30க்கு எல்லாம் முடிந்து விடும். 7.30க்கு மியூஸிக் போயிருச்சு என்றால் 9.00 மணிக்கெல்லாம் மியூஸிக்கை செட் பண்ணிட்டு அதுவும் இப்போது எலக்ட்ரானிக்ஸ் வந்த பிறகு அதை எல்லாம் புரோகிராம் செய்ய வேண்டியிருக்கிறது. அதை புரோகிராம் பண்றதுக்கு டைம் ஆகும்.

அந்த இடைவெளியில் ஏன் சும்மா இருக்கணும்னுதான் வெண்பாவை எழுத ஆரம்பித்தேன். அதுமட்டுமில்லாமல் புத்தகங்கள் எல்லாம் எழுத ஆரம்பித்தேன். வெண்பாவை எழுதினாலும் அதை எழுதி தூக்கிப் போட்டுவிட்டேன். இரண்டு நாள்கள் கழித்து பார்க்கும் போது என்னடா அது அங்க ஒன்னு கிடக்குதுனு பார்த்தால் நான் எழுதிய வெண்பாதான் இருந்தது.

சரி இப்படியே விடக்கூடாது. அப்படி எழுதுவதில் என்னதான் கஷ்டம் இருக்குதுனு மேலும் எழுத ஆரம்பித்து ஆரம்பித்து வரும் புலவர்கள் எல்லாம் வியக்குற அளவுக்கு எழுத ஆரம்பிச்சுட்டேன் என இளையராஜா ஒரு பேட்டியில் கூறினார். உலக இசை மேதைகள்தான் சிம்பொனி இசையில் கைதேர்ந்தவர்கள். பெரிய மேடை. அந்த ஒரு மேடையில் 70 அல்லது 80 கலைஞர்கள் சேர்ந்து இசைக்கக் கூடிய வகையில் பார்த்திருக்கிறோம்.இப்போது மார்ச் 8 ஆம் தேதி இளையராஜாவும் சிம்பொனி இசையை நடத்த இருக்கிறார்.

ராம் சுதன்

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

2 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

3 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago