Categories: latest news

நான் காப்பி அடிச்சேன்னு இப்பதான் கண்டு பிடிச்சிருக்கான்!.. இளையராஜா கோபம்!..

Ilayaraja: கடந்த 50 வருடங்களாக தனது பாடல்களால் பலரையும் கட்டிப்போட்டவர்தான் இளையராஜா. 80களில் மிகவும் அதிக திரைப்படங்களுக்கு இசையமைத்த நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருந்தார். இளையராஜா வந்த பின் எம்.வி.விஸ்வநாதனின் மார்க்கெட்டை குறைந்து போனது. எம்.எஸ்.வி இசையமைத்துக்கொண்டிருந்த போது பல ஹிந்தி பாடல்கள் தமிழ்நாட்டிலேயே பிரபலம் ஆனது.

பலரும் ஹிந்தி பட கேசட்டுகளை வாங்கி கேட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த நிலையை இளையராஜா மாற்றினார். ராஜாவின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. 80களில் ராஜாவின் இசையை நம்பியே 90 சதவீத திரைப்படங்கள் உருவாகியது. அவரின் எல்லா பாடல்களுமே ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

ஏ.ஆர்.ரஹ்மான்: இளையராஜா வந்த பின்னர்தான் ஆடியோ கேசட்டுகள் அதிகம் விற்பனை ஆனது. பல திரைப்படங்களை தனது இசையால் வெற்றி பெறவைத்தார் இளையராஜா. 90களில் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா போன்ற புது இசையமைப்பாளர்கள் வந்தபின் இளையராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்தது.

ஆனாலும், தொடர்ந்து இசையமைத்து வந்தார். இளையராஜாவை பிடித்த பல இயக்குனர்கள் அவரிடம் போனார்கள். சினிமாவில் இசையமைத்து வந்தாலும் தொடர்ந்து பல ஊர்களிலும் இசை நிகழ்ச்சியையும் அவர் நடத்தி வருகிறார். மேலும், வெளிநாடு சென்று சிம்பொனி இசையையும் அமைத்திருக்கிறார்.

இளையராஜா பேட்டி: கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார். அப்போது அவர் மீது வைக்கப்பட்ட பல விமர்சனங்களுக்கும் பதில் சொல்லியிருக்கிறார். எனக்கு தலைக்கணம் அதிகம், திமிரு பிடித்தவர் என்றெல்லாம் பேசுகிறார்கள். எனக்கு தலைக்கணம் இல்லாமல் வேறு யாருக்கு இருக்கும். எனக்குதான் திமிறு அதிகம் இருக்கும். உண்மையில் எனக்கு திமிறு இல்லை. என்னை சொல்கிறான் என்றால் அவனுக்குதான் திமிறு அதிகம். யாரும் செய்யாததை நான் செய்திருக்கிறேன். எனக்கு திமிறு இருந்தால் அது சரிதான்’ என விளாசினார்.

மேலும், நான் காப்பி அடிச்சி பாட்டு போட்டிருக்கேன்னு 50 வருசம் கழிச்சி கண்டுபிடிச்சிருக்கான். இப்படியெல்லாம் மியூசிக் இருக்குன்னு உனக்கு நான் காட்டி இருக்கேன்டா.. 50 வருஷத்துக்கு முன்னாடி இப்படியெல்லாம் இசை இருக்குன்னு உனக்கு தெரிஞ்சதா?’ என சீறியிருக்கிறார் இசைஞானி.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

7 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

8 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

10 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

16 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

17 hours ago