மியூசிக்கே தெரியாம அவன் ஒரு லட்சம் வாங்கும்போது நான் வாங்க கூடாதா?!.. இளையராஜா சொன்னது யாரை தெரியுமா?..

சினிமாவில் அறிமுகம் கிடைத்து மேலே வளர்வது பெரிய பிரச்சனை எனில் வளர்ந்த பின் எவ்வளவு சம்பளம் வாங்குகிறோம் என்பது பலருக்கும் ஈகோ தொடர்பான விஷயமாகவே இருக்கிறது. துவக்கத்தில் வாய்ப்பு கிடைத்தால் போதும் என இருப்பார்கள். கொடுக்கும் சம்பளத்தை வாங்கி கொள்வார்கள்.

ஆனால், ஒரு படத்தின் வெற்றிக்கு தன்னுடைய பங்கு முக்கியம் என்கிற எண்ணம் எப்போது ஏற்படுகிறதோ அப்போது ஒருவர் சம்பளத்தை ஏற்றிவிடுவார். அதுவும் தன்னால்தான் படம் ஓடுகிறது என்கிற எண்ணம் வந்துவிட்டால் தாறுமாறாக சம்பளத்தை உயர்த்தி விடுவார்கள்.

இது நடிகர், நடிகை, இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என எல்லோருக்கும் இது பொருந்தும். சினிமாவை பொறுத்தவரை ஹீரோவின் சம்பளமே மற்ற எல்லாவற்றையும் விட அதிகம். விஜய், அஜித், ரஜினி போன்றவர்கள் 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குகிறார்கள் எனில் அதற்கு காரணம் படங்கள் ஓடுவதே அவர்களுக்காகத்தான்.

80களில் சினிமா உலகை கலக்கியவர் இசையமைப்பாளர் இளையராஜா. துவக்கத்தில் 5 ஆயிரம், 10 ஆயிரம் என கொஞ்சம் கொஞ்சமாக இவரின் சம்பளம் உயர்ந்து கொண்டே போனது. அவர் 50 ஆயிரம் சம்பளம் வாங்கி கொண்டிருந்தபோதுதான் பாக்கியராஜ் தான் எடுக்கவுள்ள தாவணி கனவுகள் படத்திற்கு இசையமைக்க கேட்டு ராஜாவிடம் போனார்.

அப்போது ஒரு லட்சம் சம்பளம் கேட்டிருக்கிறார் இளையராஜா. அதிர்ந்துபோன பாக்கியராஜ் ‘என்னங்க ஒரு லட்சம் கேட்குறீங்க?’ என பாக்கியராஜ் கேட்க ராஜாவோ ‘மியூசிக்கே தெரியாம ஒருத்தன் ஒரு லட்சம் வாங்கும்போது நான் கேட்கக் கூடாதா?’ என கேட்டாராம்,. ராஜா சொன்ன அந்த ஒருவர் டி.ராஜேந்தர். அப்போது டி.ராஜேந்திரின் இசைக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருந்தது.

தான் இயக்கும் படங்கள் மட்டுமில்லாமல் மற்ற சில இயக்குனர்களின் படங்களுக்கும் இசையமைத்து கொடுத்தார் டி.ராஜேந்தர். அப்படி இசையமைக்க அவர் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார். இதை ஒப்பிட்டுதான் ராஜா பாக்கியராஜிடம் தனக்கு ஒரு லட்சம் சம்பளமாக கேட்டார். பாக்கியராஜும் அவர் சம்பளத்தை கொடுத்துவிட்டார்.

ராம் சுதன்

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago