More

அடடே! ஐபிஎஸ் அதிகாரியே பாராட்டிட்டாரே! – நெகிழ்ச்சியில் ‘கர்ணன்’ படக்குழு

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். தனுஷை வைத்து அவர் இயக்கிய‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று நேர்மறையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றிருந்த நிலையில் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது அந்த எதிர்பார்ப்பை கர்ணன் பூர்த்தி செய்துள்ளது. அசுரனை அடுத்து தனுஷுக்கு இப்படம் அடுத்த பிளாக் பஸ்டர் ஹிட் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில், இப்படத்தை தமிழக காவல்துறை அதிகாரி விஜயகுமார் ஐ.பி.எஸ் பாராட்டியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நியாயமற்ற சமூக அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுகிறான் கர்ணன். பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் சக்திவாய்ந்த திரைப்படம். நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படம்’ என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Published by
adminram

Recent Posts