சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து அடல்ட் காமெடி படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி ஹிட்டானது.
அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, ஹீரோவாக நடித்துள்ளார் சந்தோஷ் ஜெயக்குமார். இரண்டாம் பாகத்திற்கு இரண்டாம் குத்து என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர்கள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாரதிராஜா முதல் பலரும் இப்படத்தை கண்டித்திருந்தனர். ஆனால், அவரை கிண்டலாக பதில் கூறிய சந்தோஷ் குமார் கடும் எதிர்ப்பிற்கு பின் மன்னிப்பு கேட்டார். இப்படத்திற்கு தடை விதிப்பது பற்றி ஆலோசிப்போம் என அமைச்சர் கடம்பர் ராஜூவே கூறினார். ஆனாலும், இப்படம் தீபாவளி ரிலீஸாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் சிம்புவை கடுமையாக கிண்டலடிப்பது போல் ஒரு காட்சியை இயக்குனர் வைத்துள்ளாராம். படம் வெளியானால் கண்டிப்பாக சிம்பு ரசிகர்கள் அதற்கு கடும் எதிர்வினை ஆற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளையராஜா இசையில்…
சினிமாவில் இரண்டு…
கமல் -…
சினிமாவில் சிலரின்…
பெரிய பட்ஜெட்…