More

துருவ் விக்ரம்மின் மூன்றாவது படத்தின் இயக்குனர் இவர்தானா? சபாஷ் சரியான சாய்ஸ்!

துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் மூன்றாவது படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார்.

Advertising
Advertising

விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் முதன் முதலாக அறிமுகமான ஆதித்ய வர்மா திரைப்படம் பல தடங்கல்களுக்குப் பின்னர் வெளியானாலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் நல்ல நடிகர் என்ற பெயரை துருவ்வுகு பெற்று தந்தது. இதையடுத்து தனது இரண்டாவது படத்தி விக்ரம்முடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் அவரின் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாரி

செல்வராஜ் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துருவ் விக்ரம் இப்போது தனது தந்தை விக்ரம்முடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரிசையாக திறமையான இயக்குனர்கள் படத்தில் அவர் நடிக்க இருப்பது அவரின் சினிமா வாழ்க்கையை ஏறுமுகமாக அமைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts