More

யாஷிகாவிற்கு திருமணம் முடிந்ததா? யார் அந்த மாப்பிள்ளை? குழப்பத்தில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவுக்கு நடிகை யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம்  அறிமுகமானவர். துருவங்கள் பதினாறு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் வெகுவாக அறியப்பட்டார். இது அவருக்கு பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வாய்ப்பை வாங்கி கொடுத்தது. சக போட்டியாளரான மகத்தை காதலிக்கிறேன் என நிகழ்ச்சியில் போட்டு உடைத்தார். பின்னர், டாஸ்க்கில் வெறித்தனமாக விளையாடி பண பரிசை வாங்கி கொண்டு வெளியேறினார். 

Advertising
Advertising

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவது யாஷிகாவின் வழக்கமாகி இருக்கிறது. அதுவும் கிளாமர் படங்களாக தான் இருக்கும். இந்நிலையில், யாஷிகாவின் சமீபத்திய புகைப்படத்தால் பலரும் குழம்பி போய் இருக்கிறார்கள். தழைய தழைய புடவை கட்டி கழுத்தில் ஒற்றை செயின் நெற்றி வகுடில் குங்குமம் என அம்சமாக போஸ் கொடுத்திருந்தார். என்னடா சொல்லாம கல்யாணம் பண்ணீட்டாங்களா என ஆராய்ந்ததில் அம்மணி அப்படி வந்தது ஒரு படத்தின் பூஜைக்கு தானாம்.

எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக நடிக்கும் படம் கடமையை செய். இப்படத்தின் பூஜையில் தான் யாஷிகா அப்படி கலந்து கொண்டு இருக்கிறார். முத்தின கத்திரிக்காய் படத்தின் இயக்குனர் வெங்கட் ராகவன் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக யாஷிகா நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

Published by
adminram

Recent Posts