">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆஸ்கர் விருதுக்கு தேர்வான ‘ஜல்லிக்கட்டு’… மகிழ்ச்சியில் மலையாள சினிமா…
ஆஸ்கர் விருதுக்கு தேர்வான ‘ஜல்லிக்கட்டு’… மகிழ்ச்சியில் மலையாள சினிமா…
லியோ ஜோஸ் பெல்லிஸ்ரி இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் ஜல்லிக்கட்டு. மாமிசத்திற்காக வெட்டப்படவிருக்கும் ஒரு மாடு தப்பி சென்றுவிடும். அந்த மாட்டை எப்படியாவது பிடித்து வந்தால் கறியில் பங்கு கொடுப்பேன் என மாமிசக்கடைக்காரர் கூற பலரும் கும்பல் கும்பலாக கிளம்புவார்கள். அதன்பின் என்ன நடந்தது என்பது இப்படத்தின் கதை.
இப்படத்தில் அந்தோனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மனிதருக்குள் இருக்கும் கற்கால ஆதிமனிதனின் மன நிலையை இப்படம் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியது. இப்படம் சினிமா விமர்சகர்ளிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், 2019ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான சிறந்த பிறமொழி படங்கள் பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட ‘ஜல்லிக்கட்டு’ படம் தேர்வாகியுள்ளது. இது படக்குழுவினருக்கும், மலையாள சினிமா உலகினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.