More

சூர்யாவை தொடர்ந்து ஜெயம் ரவி எடுத்த முடிவு – அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertising
Advertising

ஜெயம் ரவியை வைத்து ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் லஷ்மன். இவர் அடுத்ததாக ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவியை வைத்துபூமி’. எனும் படத்தை இயக்கியுள்ளார். விவசாயத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் விவசாயம் செய்யும் ஹீரோவாகவே நடித்துள்ளார் ஜெயம் ரவி. இந்த படத்தில் நிதி அகர்வால் நாயகியாகவும், சதீஷ் நண்பர் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

எல்லா பணிகளும் முடிந்துள்ள நிலையில் ஜெயம் ரவியின் 25 ஆவது படமாக ரிலிஸாக இருந்தது பூமி. கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்படாமல் இருந்தால் சில மாதங்களுக்கு முன்னரே ரிலிஸ் ஆகி இருக்கும். இப்போது தியேட்டர்கள் திறப்பது குறித்து உறுதியான தகவல் இல்லை என்பதால், இந்த படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் ஜெயம் ரவியின் மீது அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

Published by
adminram

Recent Posts