More
Categories: Cinema News latest news

விஜயகாந்த் மரணத்துக்கே வராத சூர்யா!.. அங்க மட்டும் ஜோடியா போறாரு!.. விளாசிய பிரபலம்!..

100 கோடிக்கு மேல் வருமானம் உள்ள தொழிலதிபர்களை மட்டுமே அம்பானி வீட்டு திருமணத்திற்கு அழைக்கப்பட்டதாக பத்திரிகையாளர் சேகுவரா ஜெய்சங்கர் ஆதங்கப்பட்டு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

இயக்குனர் அட்லீ தனது மனைவியின் ஜாக்கெட்டில் முதுகுக்கு பின்னாடி ஆனந்த் அம்பானியின் பெயரை பிரிண்ட் செய்து அணிந்திருந்தது எல்லாம் ரொம்ப பெரிய கேவலம் என விளாசியுள்ளார்.

பெரியண்ணா படத்தில் சூர்யாவுக்காக நடித்து கொடுத்த நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு முதல் ஆளாக சூர்யா செல்லாமல், சில நாட்கள் கழித்து சென்று அழுது புலம்பி ட்ராமா போட்டார்.

ஆனால், அம்பானி விட்டு கல்யாணத்துக்கு முதல் ஆளாக தனது மனைவி ஜோதிகாவுடன் கலந்து கொண்டார். சென்னையில், நடக்கும் நிகழ்ச்சிகளை எல்லாம் அவர் கண்டுக் கொள்வதே இல்லை. முழுக்க முழுக்க மும்பை வாசியாகவே சூர்யா மாறிவிட்டார் என சேகுவரா ஜெய் சங்கர் விளாசி உள்ளார்.

மூத்த பத்திரிகையாளருக்கு வயித்தெரிச்சல் அதான் இப்படி புலம்புறாரு என சூர்யா ரசிகர்கள் அவரை கமெண்ட் பக்கத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் தென்னிந்தியாவில் இருந்து ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், மகேஷ் பாபு, ராம் சரண், அட்லீ, பிரியா அட்லீ, ஏ.ஆர். ரஹ்மான் குடும்பம், பிருத்விராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

அட்லீ மற்றும் சூர்யா கலந்து கொண்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில், ரஜினிகாந்த் டான்ஸ் ஆடியதையும் சோஷியல் மீடியாவில் பலர் கேலி செய்தனர்.

Published by
Saranya M