800 கோடி வசூல்!.. பாக்ஸ் ஆபிஸில் பிரபாஸ் தான் ராஜா!.. தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?..

Published on: July 17, 2024
---Advertisement---

கடந்த ஆண்டு சலார் படத்தின் மூலம் 700 கோடி ரூபாய் வசூலை அள்ளிய நடிகர் பிரபாஸ் இந்த ஆண்டு கல்கி 2898 ஏடி படத்தின் மூலம் 9 நாட்களில் இதுவரை 800 கோடி ரூபாய் வசூலை உலக அளவில் பெற்றிருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தை கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கிய நாக் அஸ்வின் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக கல்கி படத்தை பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, சோபனா, பசுபதி மற்றும் நடிகையர் திலகம் படத்தில் நடித்த துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டாவை கேமியோவாக நடிக்க வைத்து உருவாக்கினார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் புஜ்ஜி எனும் ஏஐ வாய்ஸ்க்கு குரல் கொடுத்திருந்தார். சமந்தாவை தவிர மற்ற அனைவருமே முக்கிய கதாபாத்திரங்களில் நாக் அஸ்வின் நடிக்க வைத்து விட்டார். இதுவரை ஒட்டுமொத்தமாக உலக அளவில் 800 கோடி ரூபாய் வசூலை கல்கி 2898 ஏடி திரைப்படம் பெற்றிருப்பதாக கூறுகின்றனர்.

இந்தியாவில் மட்டும் கல்கி 2898 ஏடி திரைப்படம் 500 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகவும் ஓவர்சீஸில் 300 கோடி ரூபாய் வசூல் வந்துள்ளதாகவும் கூறுகின்றனர். இதில், தமிழ்நாட்டில் மட்டும் 28 கோடி ரூபாய் வசூலை கல்கி 2898 ஏடி படம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரண்டாவது வாரத்திலும் இந்தியளவில் பெரிய படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், கல்கி திரைப்படம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் என்றும் அதிக பட்சமாக 900 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.