இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த காந்தாரா திரைப்படம் 2022ம் ஆண்டு பான் இந்தியா படமாக வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. அதை தொடர்ந்து சுமார் மூன்று ஆண்டுகால உழைப்பிற்கு பிறகு இன்று ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு ரிலீஸ் தேதியை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
கன்னட படமான உலிதவரு கண்டந்தேவில் முக்கிய பாத்திரத்தில் அறிமுகமானார் ரிஷப் ஷெட்டி. அதை தொடர்ந்து கிரிக் பார்ட்டி, சர்க்காரி ஹி பிரா. ஷாலே போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும், பெல் பாட்டம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் அவர் இயக்கி நடித்த காந்தாரா படம் உலகளவில் 400 கோடிக்கு மேல் வசூலித்து, கன்னட திரையுலகில் இரண்டாவது அதிக வசூல் செய்த படமாக பாராட்டு பெற்றது.
இந்நிலையில் இன்று ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு காந்தாரா: சாப்டர் 1 திரைப்படம் 2025 அக்டோபர் 2 அன்று தசரா பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.
மேலும், காந்தாரா 2 படத்தில் காந்தாரா முதல் பாகத்தின் முந்தைய கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தைப் போலவே, இப்படமும் கொங்கன் நாட்டுப்புற வாழ்வியல் மற்றும் பண்பாட்டை உண்மையாக சித்தரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ரிஷப் ஷெட்டி சத்ரபதி சிவாஜி மகாராஜ், ஜெய் ஹனுமான் மற்றும் அஸ்வின் கங்கராஜூ இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…