More

சினிமாவுக்கு புதிய கட்டுப்பாடுகள் – திட்டமிட்டபடி நாளை கர்ணன் வெளியாகுமா?…

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசு இன்று பல புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. குறிப்பாக மால், திரையங்கள் உள்ளிட்ட கேளிக்கை விடுதிகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மேலும், இரவு நேர காட்சிக்கு தடை விதித்துள்ளது. கொரோனா  பரவல் அதிகமாகவுள்ள நிலையில் இதை ஏற்றுக்கொள்வதாக திரையரங்க உரிமையாளர் சங்கமும் தெரிவித்துள்ளது. 

Advertising
Advertising

இந்நிலையில், நாளை மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன்  திரைப்படம் நாளை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவும் நடைபெற்று வருகிறது. தற்போது 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி எனில், கர்ணன் படம் நாளை வெளியாகுமா என சந்தேகம் எழுந்தது. மேலும், முன்பதிவில் சிக்கல் ஏற்படும் எனவும் கருதப்பட்டது. எனவே, தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால், திட்டமிட்டபடி நாளை கர்ணன் திரையரங்குகளில் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். இந்த செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Published by
adminram

Recent Posts