கார்த்தி, ஜெயம் ரவி வெளியே: விக்ரம் ஐஸ்வர்யா ராய் உள்ளே: ’பொன்னியின் செல்வன்’ லேட்டஸ்ட் அப்டேட்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே

By :  adminram
Update: 2020-01-10 13:13 GMT

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்ப்பில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரமும், நந்தினி என்ற கேரக்டரில் ஐஸ்வர்யாராயும் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து கார்த்தி தனது அடுத்த திரைப்படமான பிஎஸ் மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும் அதேபோல் ஜெயம் ரவியும் ஜனகனமன என்ற படத்தில் நடிக்க இருப்பதாகவும் இருவரும் மீண்டும் ஒரு சில மாதங்கள் கழித்தே ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு படத்தின் படப்பிடிப்பில் திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது