கே எல் ராகுல் 102, ரோஹித் 159 – ருத்ர தாண்டவம் ஆடிய இந்தியா !

84da216dfbea6b64a2337219fdc3e8f7

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புகளுக்கு 387 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

இதில் மீண்டும் டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இதன் மூலம் களமிறங்கிய இந்தியா தன் தொடக்க ஆட்டக்காரர்களின் சிறப்பான ஆட்டத்தால் வேகமாக ரன்களைக் குவிக்க ஆரம்பித்தது. முதல் 10 ஓவர்கள் நிதானமாக விளையாடிய இருவரும் அதன் பின் தங்கள் வழக்கமான ஆட்டத்துக்கு மாறி சதமடித்து அசத்தினர்.

இவ்விருவரும் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 102 ரன்களில் அவுட் ஆக அடுத்து வந்த கோலி எதிர்பாராதவிதமாக டக் அவுட் ஆனார். அதன் பின்னர் அதிரடியில் புகுந்த ரோஹித் ஷர்மா 159 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். கடைசி ஓவர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் (53) மற்றும் பண்ட் (39) ஆகியோரின் அதிரடியால் இந்திய அணி ஆட்டமுடிவில் 387 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த இமாலய இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி எடுக்குமா என்பதை உணவு இடைவேளைக்குப் பிறகு பார்க்கலாம்.

 

Related Articles

Next Story