இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரௌபதி படத்தின் தொலைக்காட்சி உரிமைய விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படம் எதிர்பார்க்காத விதமாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக லாபம் கொடுத்த திரைப்படம் என சொல்லப்படுகிறது. ஆனால் சாதி குறித்து சர்ச்சையானக் கருத்துகளைக் கொண்ட இந்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களையும் பெற்றது.
இந்த வருடம் வெளியானப் படங்களில் மிகப்பெரிய வெற்றி படம் என்றால் அது திரௌபதி திரைப்படம்தான் எனக் கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. ஆனால் விமர்சன ரீதியாக அந்த படத்துக்கு எல்லா தரப்புகளில் இருந்தும் எதிர்மறையான விமர்சனங்களே வந்தன. மேலும் அந்த படத்தின் இயக்குனர் மோகன் ஒரு சாதியை தூக்கிப் பிடிப்பதாகவும் ஒடுக்கப்பட்ட இளைஞர்களை இழிவாக சித்தரிப்பதாகவும் கண்டனங்கள் எழுநதன.
இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமம் விற்கப்படாமல் இருந்த நிலையில் இப்போது அதை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.
சினிமாவில் இரண்டு…
கமல் -…
சினிமாவில் சிலரின்…
பெரிய பட்ஜெட்…
பாரதிராஜாவால் தமிழில்…