">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வாட்ஸ் ஆப் குருப்பில் சிறுமிகளின் நிர்வாணப்படங்கள் – நித்யானந்தா மீது அடுத்த புகார் !
நித்யானந்தா தான் ஆரம்பித்த ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் இருப்பவர்களை நிர்வாணமாகப் புகைப்படங்களை பகிரச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக ஜனார்த்தன சர்மா தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா தான் ஆரம்பித்த ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் இருப்பவர்களை நிர்வாணமாகப் புகைப்படங்களை பகிரச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக ஜனார்த்தன சர்மா தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா தனது இரு மகள்களைக் கடத்தி வைத்துக்கொண்டு தன்னிடம் ஒப்படைக்காமல் இருப்பதாக தொழிலதிபர் ஜனார்த்தன சர்மா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புகாரளித்தார். இதனையடுத்து நித்யானந்தா பற்றி மீண்டும் சர்ச்சை எழவே அவரைத் தேட இந்தியாவை விட்டு அவர் தப்பித்து சென்றுவிட்டதாக சொல்லப்பட்டது.
இது சம்மந்தமாக ஜனார்த்தனன் சர்மா நேற்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ‘நித்யானந்தா ஒரு வாட்ஸ் அப் குழுவை நடத்தி வந்தார். அதில் தனது இரு மகள்கள் உட்பட 12 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவில் உள்ளவர்கள் தங்களது நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள நித்யானந்தாவால் வற்புறுத்தப்பட்டனர்’ எனத் தெரிவித்து அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.