உள்ளாட்சி தேர்தல் ; கணவர் மனைவி இருவரும் வெற்றி – கன்யாகுமாரி அருகே ஆச்சரியம்

Published on: January 4, 2020
---Advertisement---

90fcdf8ccd506f8bcbbd901ad87c4c88

டிசம்பர் மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்றும், நேற்று முன் தினமும் நடைபெற்றது. இதில், பல சுவாரஸ்யமான மற்றும் ஆச்சர்ய சம்பவங்கள் நடந்துள்ளது. 80 வயது மூதாட்டி, கல்லூரி மாணவர் மற்றும் மாணவி மற்றும் சில திருநங்கைகள் இந்த தேர்தல் வெற்றி பெற்று ஆச்சயர்யப்படுத்தியுள்ளனர்.

இந்த தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குலசேகரபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக பிரமுகரான சுடலைப்பாண்டி போட்டியிட்டார். இவர் மொத்தம் 838 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

e290f1f940ba1aea93232d11ba272a94-1

அதேபோல், குலசேகரபுரம், வடக்கு தாமரைகுளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் அவரின் மனைவி சண்முகவடிவு போட்டியிட்டு அவரும் வெற்றி பெற்றுள்ளார். இப்படி, ஒரே ஊராட்சி ஒன்றியத்தில் கணவன், மனைவி இருவரும் வெற்றி பெற்ற சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

adminram

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment