Categories: latest news

பத்மபூஷன் கிடைக்க காரணம்!.. அஜித் சொன்ன வார்த்தையில் ஆடிப்போன மகிழ் திருமேனி!…

Ajithkumar: மத்திய அரசு, மாநில அரசு இரண்டுமே பல விருதுகளை இந்திய குடிமகன்களுக்கு அறிவிக்கிறது. சினிமா, இலக்கியம், இசை, சமூக சேவை உள்ளிட்ட பல துறைகளில் சாதித்தவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளும் அடக்கம். திரையுலகை சேர்ந்த பலரும் இந்த விருதுகளை வாங்கியிருக்கிறார்கள்.

பத்மபூஷன்: எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவர் திருப்பி கொடுத்துவிட்டார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செவாலியர் விருது அளிக்கப்பட்டது. ரஜினிக்கு பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் போன்ற விருதுகள் அறிவிக்கப்பட்டது. கமலுக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அஜித்துக்கு விருது: இந்நிலையில்தான், சமீபத்தில் நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டது. இந்தியாவில் அளிக்கப்படும் விருதுகளில் 3வது பெரிய கவுரமான விருது இது. அஜித் ரசிகர்களும் இதை கொண்டாடினார்கள். திரையுலகை சேர்ந்த பலரும் அஜித்துக்கு வாழ்த்து சொன்னார்கள். ஆனால், இதற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதாவது, விஜய்க்கு சரியான போட்டியாக அஜித் இருப்பதால் அவரை கவுரப்படுத்துகிறார்கள் என்றும் சிலர் சொன்னார்கள்.

அதேபோல், ‘சினிமாவில் பணியாற்றியதற்கு இந்த விருது கொடுப்பதாக இருந்தால் அஜித்துக்கு இது பொருந்தாது. ஏனெனில், அவர் தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிக்கே வரமாட்டார். அப்படிப்பட்டவருக்கு எப்படி இந்த விருது?’ என சினிமா பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இந்த விருது அறிவித்தவுடன் எல்லோருக்கும் நன்றி சொன்னார் அஜித்.

மகிழ் திருமேனி: இந்நிலையில், அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை இயக்கியுள்ள மகிழ் திருமேனி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘அஜித் சாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டவுடன் அவருக்கு வாழ்த்து சொல்லி மெசேஜ் அனுப்பினேன். அதற்கு பதில் அனுப்பிய அவர் ‘எனக்கு இந்த விருது கிடைக்க பலரும் காரணம். அதில் நீங்களும் அடக்கம்’ என சொல்லியிருந்தார். நான் ஆடிப்போய்விட்டேன்.

அவருக்கு இந்த விருது கிடைக்க எந்த வகையிலும் நான் காரணமில்லை. அவரை வைத்து ஒரு படம் இயக்கியிருக்கிறேன். அவ்வளவுதான். ஆனால், அவர் அப்படி சொன்னதால் அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் யோசித்து கொண்டிருந்தேன். தனக்கு கிடைத்த மிகப்பெரிய விருதை கூட அவர் எல்லோருடனும் பகிர ஆசைப்படுகிறார். அந்த தாராள மனசு யாருக்கு வரும்’ என நெகிழ்ந்து பேசியிருந்தார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

57 minutes ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

1 hour ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

3 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

6 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

19 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

19 hours ago