சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் தனது 14 வயது தங்கையை வன்புணர்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். அவர் தனது கணவனைப் பிரிந்து வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு தன் மகன் மற்றும் மகளோடு வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுவன் தனது தங்கையை கட்டாயப்படுத்தி பலவந்தமாக வன்புணர்வு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபற்றி அந்த பெண் தனது தோழியிடம் சொல்ல, அவர் தனது பெற்றோரிடம் இதுபற்றி சொல்லியுள்ளார். அவர்கள் இதுசம்மந்தமாக போலிஸில் புகாரளிக்க சிறுமியின் அண்ணனைக் கைது செய்துள்ளனர் போலிஸார். விசாரணையில் அந்த சிறுமியைக் கட்டிப்போட்டு அவர் பல முறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Actor Dhanush:…
Tamil Movies:…
இந்தியாவும் இலங்கையும்…
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு…
திரையுலகில் ஒவ்வொரு…