மோடியும் அமித்ஷாவும் நாட்டுக்கு நல்லதுதான் செஞ்சுருக்காங்க: மீராமிதுன்

6747376ce113453aaf1bb57539a809b1

குடியுரிமை சட்டத்தை பெரும்பாலான திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நடிகையும் பிக்பாஸ் 3 போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் இந்த சட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் மோடியும் அமித்ஷாவும் இந்த சட்டத்தின் மூலம் நாட்டுக்கு நல்லது செய்துள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்

இந்தியாவின் பாதுகாப்பு கருதியும் நாட்டு மக்களின் நன்மை கருதியும் இந்த சட்டத்தை மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் ஆழ்ந்து யோசித்து கொண்டு வந்துள்ளதாகவும் இந்த சட்டத்தை அரசியல் காரணங்களுக்காகவே அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்

மேலும் மாணவர்கள் இந்த சட்டம் குறித்த புரிதல் இல்லாமல் இருப்பதாகவும் இந்த சட்டத்தை முழுமையாக படித்துப் பார்த்தால் அவர்களுக்கு தெளிவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். எந்த ஒரு புதிய சட்டமும் ஆரம்பத்தில் தீங்கு போல தான் தோன்றும் என்றும் ஆனால் காலம் போகப் போகத்தான் அந்த சட்டத்தின் நன்மை மக்களுக்கு புரிய வரும் என்றும் அதுவரை பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் வன்முறை செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கையை காவல்துறையினர் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மீராமிதுன் தெரிவித்துள்ள இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related Articles
Next Story
Share it