பொள்ளாச்சியில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே நடந்த சண்டையில் மாமியாரை தலையில் கடித்துள்ளார் மருமகள்.
பொள்ளாச்சி மாவட்டம் மின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி. பத்திரப்பதிவராக பணியாற்றும் இவருக்கு சரவணன் என்ற மகனும் கல்பனா என்ற மருமகளும் உள்ளனர். கல்பனாவும் சரவணனும் தனியாக வசித்து வரும் நிலையில் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்து தாய் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார் சரவணன்.
இதனால் மாமியார் நாகேஸ்வரியின் மேலும் கோபமாக இருந்துள்ளார் கல்பனா. இது சம்மந்தமாக நடந்த தகராறு ஒன்றில் கல்பனா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதை வாபஸ் வாங்குமாறு கல்பனா நாகேஸ்வரியை வற்புறுத்தியுள்ளார். இது சம்மந்தமாக நடந்த வாக்குவாதத்தில் கோபமான கல்பனா நாகேஸ்வரியை தலையில் கடித்துள்ளார்.
இதில் நாகேஸ்வரியின் தலையில் ஆழமாகக் காயம் பட அவருக்கு மருத்துவமனையில் 6 தையல் போடப்பட்டுள்ளது.
ஒரு படம்…
நடிகர் சிம்புவை…
விடாமுயற்சி திரைப்படம்…
ஷங்கர் இயக்கத்தில்…
அன்னக்கிளி படம்…