திருநெல்வேலியில் 4 வயது மகனுடன் தந்தை வீடியோ காலில் பேசியதால் அவரது மனைவியின் கள்ளக்காதல் வெளித்தெரிந்துள்ளது.
நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருகே உள்ள டாணா பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் அந்தோணி பிரகாஷ் மற்றும் தீபா. இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகன் உள்ளார். அந்தோனி டேங்கர் லாரி ஓட்டுனர் என்பதால் அவர் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று தங்கவேண்டிய சூழல் உண்டாகியுள்ளது.
இந்நிலையில் தீபா, மகளிர் சுய உதவிக் குழுக்களில் கடன் வாங்க அதை வசூலிக்க வந்த சொரிமுத்து என்பவரோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதை அரசல் புரசலாக தெரிந்து கொண்ட அந்தோனி ஒரு நாள் வெளியூரில் இருந்தபடி தன் மகனிடம் வீடியோ கால் பேசும் போது தன் வீட்டில் சொரிமுத்து இருப்பதைப் பார்த்துள்ளார்.
இது சம்மந்தமாக கணவன் மனைவிக்குள் பிரச்சனை எழ தீபா, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றியுள்ளனர். ஆனால் அதன் பின்னும் சொரிமுத்துவுடனான பழக்கத்தை தீபா நிறுத்தவில்லை. இந்நிலையில் தீபா, தன் கணவர் வெளியூர் சென்றிருந்த போது காதலனையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு சிவராத்திரிக்காக கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது அந்தோனி குழந்தைக்கு அவர் வீடியோ கால் செய்ய கோயில் வாசலில் சொரிமுத்துவுடன் லோகேஷ் இருப்பதை அவர் பார்த்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சொரிமுத்து குழந்தையை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் லோகேஷ் மயக்கமடைந்துள்ளார். இதனால் பதற்றப்பட்ட இருவரும் குழந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கே தன்னை சிறுவனின் தந்தை என சொல்லியுள்ளார் சொரிமுத்து, மருத்துவமனையில் குழந்தை சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளான்.
இந்நிலையில் விஷயம் அறிந்து லோகேஷின் தந்தை மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கூட அங்கு அவர்களுக்கு சொரிமுத்துவுக்கும் இடையில் தகராறு உருவாகியுள்ளது. அங்கிருந்து தப்பித்துள்ளார் சொரிமுத்து. போலீஸார் நடத்திய விசாரணையில் அனைத்து உண்மைகளையும் சொல்லியுள்ளார் தீபா. இதையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…