முஷாரஃப்க்கு தூக்குத் தண்டனை – பாகிஸ்தானில் பதற்றம் !

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு எதிரான தேசத்துரோக வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 1999 ஆம் ஆண்டு ராணுவப்புரட்சியின் மூலம் நவாஷ் ஷெரிப்பின் ஆட்சியைக் கவிழ்த்து அதிபரானார் பர்வேஸ் முஷாரப். தன்னுடைய ஆட்சியில் 2007 ஆம் ஆண்டு அவசரநிலையை பிரகடனப்படுத்தினார்.

அதன் பின்னர் ஆட்சியமைத்த நவாஷ் ஷெரிப்  2013ஆம் ஆண்டு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியதற்காக  தேசதுரோக வழக்கைப் பதிவு செய்தது. இதனால் முஷாரப் தப்பித்து துபாயி தஞ்சமடைந்தார். இதுசம்மந்தமான வழக்கு பெஷாவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முஷாரப் குற்றவாளிதான் என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது.

இந்த தீர்ப்பால் பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Published by
adminram