More

நான் நடிகன் என்பதே எனது மகளுக்கு தெரியாது: ரஜினி பட வில்லன் பேட்டி!

நான் ஒரு பெரிய நடிகன் என்பதே எனது மகளுக்கு தெரியாது என்றும் நாங்கள் வெளியே போகும் போது அனைவரும் புகைப்படம் எடுக்கும்போது ஏன் எல்லோரும் நம்மையே புகைப்படம் எடுக்கிறார்கள் என்று அப்பாவித்தனமாக தனது மகள் கேள்வி கேட்பதாகவும் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்

Advertising
Advertising

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 என்ற படத்தில் வில்லனாக நடித்தவரும், பாலிவுட் படங்களில் முன்னணி ஹீரோவாகவும் இருக்கும் அக்ஷய்குமார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் தன்னுடைய படங்களின் முதல் விமர்சனம் தனது மகனிடம் இருந்து தான் வரும் என்றும் படம் நன்றாக இருந்தாலும் நன்றாக இல்லாவிட்டாலும் நேரடியாக தன்னிடம் தனது மகன் படம் குறித்த தனது பார்வையை கூறுவான் என்றும் அவனது விமர்சனத்தை வைத்துதான் அந்த படம் வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா? என்று தான் கணிப்பதாகவும் கூறியுள்ளார் 

மேலும் தனது மகளுக்கு இன்னும் தான் நடிகர் என்பதே தெரியாது என்றும் அதனை புரிந்து கொள்ளும் வயது அவளுக்கு இல்லை என்றும் கூறிய அக்ஷய்குமார், நம்மை எல்லோரும் ஏன் புகைப்படம் எடுக்கிறார்கள் என்று ஆச்சரியமாக கேட்டதாகவும் அதற்கு புகைப்படம் எடுப்பவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நம்மை புகைப்படம் எடுப்பதால் வருமானம் வரும் என்று கூறி சமாதானம் செய்ததாகவும் தெரிவித்தார்.அக்‌ஷயகுமாரின்  இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Published by
adminram

Recent Posts