More

என் கதையை சுட்டு விட்டார்கள்… புகார் கூறிய உதவி இயக்குனர் -ஜெயம் ரவியின் பூமிக்கு வந்த சிக்கல்!

ஜெயம் ரவியின் 25 ஆவது படமான பூமி படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.

Advertising
Advertising

ஜெயம் ரவியின் 25 ஆவது படமாக உருவாகியுள்ளது பூமி திரைப்படம். இந்த படத்தை அவரை வைத்து ஏற்கனவே ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய படங்களை இயக்கிய லஷ்மன் இயக்கி உள்ளார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து இப்போது ரிலிஸுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன்களை பார்த்த உதவி இயக்குனர் ஒருவர் இந்த படத்தின் கதை தன்னுடையது என கதாசிரியர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

சில காலமாக கதைத் திருட்டு சர்ச்சைகள் இல்லாமல் இருந்த நிலையில் இப்போது மீண்டும் இந்த சிக்கல் உருவாகியுள்ளது. இதனால் இந்த பஞ்சாயத்து இப்போது கதாசிரியர் சங்கத் தலைவர் பாக்யராஜ் முன்னர் சென்று விசாரணைக்காக காத்திருக்கிறது.

Published by
adminram

Recent Posts