44 நாட்களில் முடிந்த நயன்தாராவின் அடுத்த படம்!

33f9452d005f52e7eb75fe1507945791-1

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விஜய்யுடன் நடித்த ’பிகில்’ திரைப்படம் கடந்த தீபாவளி விருந்தாகவும், ரஜினியுடன் நடித்த ’தர்பார்’ திரைப்படம் பொங்கல் விருந்தாகவும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அவர் தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகிவரும் ’மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தில் டைட்டில் கேரக்டரில் நடித்து வருகிறார்

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்திற்கு வந்து உள்ளது

இந்த நிலையில் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் ’தொடர்ச்சியாக 44 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டதாகவும் இதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் நயன்தாராவின் ஒத்துழைப்பு மிக அருமையாக இருந்ததாகவும் அவருடன் பணிபுரிந்த நாட்களை தன்னால் மறக்க முடியாது என்றும், அவருக்கும் தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இதனையடுத்து படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர். சில ஒரு சில காட்சிகள் மட்டுமே இந்த படத்தின் படப்பிடிப்பு மீதம் இருப்பதை அடுத்து விரைவில் இந்த படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், கிரிஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

Related Articles

Next Story