More

ஒரு டிவிட் போட்டது குத்தமாய்யா!…கவினை வச்சு செய்யும் நெட்டிசன்கள்…..

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். தனுஷை வைத்து அவர் இயக்கிய‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று நேர்மறையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றிருந்த நிலையில் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது அந்த எதிர்பார்ப்பை கர்ணன் பூர்த்தி செய்துள்ளது. அசுரனை அடுத்து தனுஷுக்கு இப்படம் அடுத்த பிளாக் பஸ்டர் ஹிட் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில், பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கர்ணன்… தூங்க முடியவில்லை’ என பதிவிட்டு பாராட்டியுள்ளார்.

இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் கவின் தூங்கிக்கொண்டிருக்கும் புகைப்படங்களை தொகுத்து ‘போய் தூங்குங்க புரோ’ என நெட்டிசன் ஒருவர் அவரை கிண்டலடித்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts