More

நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்… முக்கிய வீரர் விலகல்- இந்தியாவுக்கு பின்னடைவு!

நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அணியின் துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மா விலகியுள்ளார்.

Advertising
Advertising

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி 20 தொடரில் 5-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதில் கடைசி போட்டியின் போது விளையாடிய ரோஹித் ஷர்மா காலில் தசைப் பிடிப்புக் காரணமாக பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயம் முழுதாக குணமடையாததால் அவர் 5 ஆம் தேதி நடக்கும் ஒருநாள் தொடரில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். அவருக்குப் பதிலாக மாற்றுவீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் ஷர்மா விலகியுள்ளதால் இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
adminram

Recent Posts