வீரர்கள் 30 வயதுக்கு மேல் ஆகும் போது பயிற்சிகளை இன்னும் அதிகமாக்கிக் கொள்ள வேண்டும் என கோலிக்கு கபில்தேவ் அறிவுரை கூறியுள்ளார்.
நியுசிலாந்து தொடரில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் தனது பார்மை இழந்துள்ள விராட் கோலிக்கு தனது அறிவுரையை வழங்கியுள்ளார் இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ். அதில் ‘ வீரர்கள் அதிகமுறை பவுல்ட் அல்லது எல் பி டபுள்யூ முறையில் விக்கெட்டை இழக்கும் போது கூடுதல் பயிற்சி எடுக்கவில்லையெனில் சிக்கல்தான்.
விராட் கோலிக்கு இப்போது 31 வயது ஆகிறது. கண்பார்வை கொஞ்சம் மாறுபட்டிருக்கும். அதனால் அதிகமாக பயிற்சிகளை மேற்கொண்டு, கண்பார்வையை அவர் கொஞ்சம் சரி செய்து கொள்ள வேண்டும். டிராவிட் அடிக்கடி பவுல்ட் முறையில் அவுட் ஆனபோது தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
சேவாக், திராவிட், விவியன் ரிச்சர்ட்ஸ் போன்றவர்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது. ’ எனத் தெரிவித்துள்ளார்.
SundarC: இயக்குனர்…
2004ம் வருடம்…
Gilli Movie:…
நான் இசையமைத்த…
Kavin: தமிழ்சினிமாவில்…