தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி மற்றும் தொடர்ந்து 100 கோடி வசூல் படங்களாக கொடுத்து வருபவர்தான் நடிகர் விஜய். ரசிகர்களால் செல்லமாக இவர் தளபதி என அழைக்கப்படுகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பிகில் 200 கோடிக்கு மேலும், மாஸ்டர் 150கோடிக்கு மேலும் வசூலித்தது.
மாஸ்டர் படம் வெளியான சமயத்தில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டரில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதியளித்ததால் அதன் வசூலும் குறைந்தது. இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் விஜய்யை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படத்தை இயக்க உள்ளதாக கூறியுள்ளார்.
அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். அதன்பின் மெட்ராஸ் படத்தின்மூலம் பிரபல இயக்குனரானார். இந்த படத்தையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா என இரண்டு பெரிய படங்களை எடுத்து உலக அளவில் பேமஸ் ஆனார்.
ஆனால், இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு சரியாக ஓடவில்லை. இதன்பின் மூன்று ஆண்டு இடைவேளைக்குப் பின் ஆர்யாவை வைத்து ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கினார். ஓடிடி-யில் வெளியான இப்படம் அனைத்து மொழி ரசிகர்களிடமிருந்தும் வரவேற்பை பெற்றது.
இந்தப்படத்தின் வெற்றிக்குப்பின் ரஞ்சித்தின் மார்க்கெட் பெரிய அளவிற்கு உயர்ந்தது. இதையடுத்து பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அட்டக்கத்தி பாணியில் காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வனை வைத்து ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இதையடுத்து விக்ரமை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இந்நிலையில் விஜய்யை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படத்தை இயக்க ஆசைப்படுகிறேன். சூப்பர் ஹீரோ கதையில் வெறும் கற்பனை மட்டும் இருக்காது, கற்பனைக்கும், நிஜத்துக்கும் உள்ள தொடர்பில் கதை பண்ணியிருக்கிறேன் என கூறியுள்ளார்.
விஜய் ஓகே சொன்னால் ஸ்பைடர் மேன் போல ஒரு படத்தை தமிழில் பார்க்கலாம் என்ற ஆவலில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
சினிமாத்துறையில் எப்போதும்…
Ilaiyaraja Manirathnam:…
ThugLife: கமல்ஹாசன்…
Siragadikka Aasai:…
Actor Ajith:…