More

மீண்டும் தொலைக்காட்சிக்கு திரும்பும் பாண்டே – எந்த சேனல் தெரியுமா ?

தந்தி டிவியின் மூலம் பிரபலமான ரங்கராஜ் பாண்டே சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொலைக்காட்சிகளில் தலைக்காட்ட உள்ளார் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

தந்தி தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு ஆசிரியராக இருந்த ரங்கராஜ் பாண்டே ஆய்த எழுத்து, கேள்விக்கு என்ன பதில் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் அரசியல் ஆர்வமுள்ள மக்களிடம் பிரபலம் அடைந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் தந்தி டிவி நிர்வாகத்தோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அங்கிருந்து வெளியேறினார்.

அதன் பின்னர் சாணக்யா என்ற யுடியூப் சேனலை ஆரம்பித்து அதை வேந்தர் தொலைக்காட்சியோடு இணைத்து சில காலம் பணியாற்றினார். இடையில் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். ஆனாலும் அதன் பின்னர் தொடர்ச்சியாக அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் அடுத்ததாக அவர் நியூஸ் 7 தொலைக்காட்சியில் சேரப்போகிறார் என சொல்லப்படுகிறது. ஆனால் இரு தரப்பாலும் இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Published by
adminram

Recent Posts