More

மஞ்சு விரட்டு மாட்டுக்கு கவிதை பாட்டு –  அலப்பரைக்கு அளவே இல்லையா? : வைரலாகும் வீடியோ

பொங்கல் பண்டிகை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டும், மஞ்சு விரட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இது தொடர்பான பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

Advertising
Advertising

இந்நிலையில், ஒரு இடத்தில் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. அதாவது, மாட்டை அவிழ்த்து விட்டு விடுவார்கள். அது தன் கால் போன போக்கில் அங்கும் இங்கும் ஓடும். குறுக்கு வந்தால் முட்டப் பாயும். மாட்டை சீண்டுவதுபோல் வாலிபர்கள் பாவனை செய்வார்கள். அப்படி மாடு ஒரு ஆல மரத்தின் அருகே சென்ற போது மாட்டிடமிருந்து தப்பிக்க ஒருவர் ஆல மர விழுதை பிடித்து தொங்கி ஊஞ்சல் ஆடினார்.

தற்போது, குசும்புக்காரர் ஒருவர் அந்த வீடியோவிற்கு ஜெயம் படத்தில் இடம் பெற்ற கவிதையே தெரியுமா? என்கிற பாடலை சேர்த்துவிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Published by
adminram