நடிகர் சூரி வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்துக்கொண்ட காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். மதுரையை சேர்ந்த இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையே தனது உடல் தோற்றத்தையும் ஹீரோ ரேஞ்சுக்கு மாற்றிக்கொண்டுள்ளார். நிறைய சமூகம் சார்ந்த விஷயங்களை குறித்து விழிப்புணர்வு செய்யும் சூரி சொந்தமாக ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி மதுரை சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் வேலம்மாள் மருத்துவமனைக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் சூரியின் அண்ணன் மகள் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் 10 சவரன் தங்க நகைகள் திருடு போனதாக கூறி அந்த மடண்டபத்தின் மேலாளர் போலீசில் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்த நகை திருட்டு சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் மண்டபத்தின் சிசிடிவி காட்சிகளை கொண்டு பார்த்ததில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நகைகளை திருடியது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
தன்னை பப்ளிசிட்டி செய்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக முக்கிய பிரபலங்களின் இல்லங்களில் நடைபெறும் விஷேசங்களில் அழையா விருந்தாளியாக கலந்துக்கொண்டு நகை மற்றும் பணத்தை திருடி அதன் மூலம் வரும் திருடன் என்ற செய்திகளை சேகரித்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பப்ளிசிட்டி தேடும் ஒரு பப்ளிசிட்டி பைத்தியம் என்பது தெரியவந்துள்ளது.
நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமணம் கடந்த 9-ம் தேதி மதுரை சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் வேலம்மாள் மருத்துவமனைக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில்10 சவரன் தங்க நகைகள் திருடு போய் உள்ளது. இதையடுத்து அந்த மடண்டபத்தின் மேலாளர் போலீசில் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த நகை திருட்டு சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து சூரி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் போலீசார் துரித விசாரணை நடித்தி சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்த்திரை உலகில்…
Siragadikka aasai:…
பிரபல நடிகரும்…
உத்தமபுத்திரன் என்று…
கவின் நடிப்பில்…