">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நேர் கொண்ட பார்வை படத்துடன் கனெக்சன் ஆன ‘பொன்னியின் செல்வன்’
தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் சூப்பராக தனது நடிப்பை வெளிப்படுத்தியவர் அர்ஜுன் சந்திரசேகர்.
தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் சூப்பராக தனது நடிப்பை வெளிப்படுத்தியவர் அர்ஜுன் சந்திரசேகர். இவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது
மணிரத்னம் இயக்கத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவ்வப்போது இந்த படத்தில் புதிய நட்சத்திரங்கள் இணைந்து வருகின்றார்கள். அந்த வகையில் இந்த படத்தில் லேட்டஸ்டாக இணைந்து இருப்பவர்தான் அர்ஜுன் சந்திரசேகர். இவரது கேரக்டர் ஒரு சில நிமிடங்களே படத்தில் வரும் கேரக்டர் என்றாலும் முக்கியமான கேரக்டர் என்று கூறப்படுகிறது
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, லால், பிரபு, விக்ரம் பிரபு, ரியாஸ்கான், சரத்குமார், உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, தோட்டா தரணி கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, கபிலன் உள்பட நான்கு பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதுகிறார்கள்.