இந்தியா திரும்பிய பொன்னியின் செல்வன் படக்குழு – விக்ரம்மின் அடுத்த ப்ளான் !

0c656a83430b168a7a02fbf2f6580a25-1

தாய்லாந்தில் ஒருமாதமாக நடந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிந்து இப்போது படக்குழு மீண்டும் இந்தியா திரும்பியுள்ளது.

மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் பல ஆண்டு இழுபறிக்குப் பிறகு இப்போது கைகூடியுள்ளது. இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் பலரும் இதில் நடித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக தாய்லாந்தில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்நிலையில் இப்போது படக்குழு இந்தியா திரும்பியுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளதாக தெரிகிறது. அதற்கு இன்னும் ஒருமாதம் காலம் ஆகும் என்பதால் விக்ரம் தனது அடுத்தபடமான கோப்ராவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதாக சொல்லபடுகிறது.

இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளார். இதுபோல விக்ரம்முக்கு கிடைக்கும் இடைவேளைகளை முழுதாகப் பயன்படுத்திக்கொண்டு முழுப் படத்தையும் முடிக்க இருக்கிறது கோப்ரா படக்குழு.

 

Related Articles

Next Story