பலராலும் கவரப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். இப்படைப்பை மணிரத்னம் படமாக்கி கொண்டு இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை 500 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரித்துவருகிறது. வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், ராஜேந்திர சோழனாக ஜெயம் ரவி, பழுவேட்டரையராக சரத்குமார் நடித்து வருகிறார்கள். முக்கிய கேரக்டர் நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவியாக த்ரிஷா நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் படத்தில் ஐஸ்வர்யா ராயிற்கு இரட்டை வேடம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பார்த்திபன், விக்ரம் பிரபு உள்பட பலரும் இப்படத்தில் நடித்துவருகிறார்கள்.
2019ன் இறுதியில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு இடையில் கொரோனாவால் தடைப்பட்டது. தற்போது அந்த பிரச்சனையில் எல்லாம் விடுப்பட்டு, படக்குழு அசுர வேகத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். மார்ச் 5-ம் தேதியோடு படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில், படத்தை தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு தீவிரமாக அடுத்தக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இன்றைய தளபதி…
Rathnam: இயக்குனர்…
Gabriella: விஜய்…
Vidamuyarchi: விடாமுயற்சி…
யூடியூப் பிரபலம்…