ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளதை அடுத்து ஜோதிகாவின் டப்பிங் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் பல சர்ச்சைகளை தாண்டி அமேசான் ப்ரைமில் மே 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று அந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலரைப் பார்த்த பலரும் தங்கள் கருத்தை சொல்லிவரும் நிலையில் ஜோதிகாவின் டப்பிங் குரல் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
ஜோதிகா பல ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசிய படங்கள் வெகு குறைவு. ஏனென்றால் அவரது உச்சரிப்பில் தமிழ் சிக்கி சின்னாபின்னமாகும். இந்நிலையில் சமீபகாலமாக காற்றின் மொழி, தம்பி மற்றும் வெளியாக இருக்கும் பொன்மகள் வந்தாள் ஆகிய படங்களில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார்.
இந்த படத்தில் வழக்கறிஞராக நடிக்கும் அவரின் வசன உச்சரிப்புகள் மிகவும் செயற்கையாக உள்ளன. இது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனால் ஜோதிகாவுக்கு நல்ல டப்பிங் கலைஞரை வைத்து பின்னணி பேச வையுங்கள் என்று சமூகவலைதளங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன.
சூர்யாவின் கங்குவா…
பிரேமம் படத்தின்…
பொதுவாக ஒரு…
இளையராஜா கொடுத்த…
எம்.ஜி.ஆருக்கு சிவாஜி…