பாகுபலிக்குப் பின்னர் நடிகர் பிரபாஸுக்குத் தேசிய அளவில் ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதன் பின்னர் அவர் நடித்து பல மொழிகளில் வெளியான சாஹோ படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை என்றாலும், பிரபாஸுக்கான கிரேஸ் குறையவில்லை.
இப்போது அவர் கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேங்ஸ்டர் படமான சலார் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தெலங்கானாவின் கோதாவரிகனி நிலக்கரி சுரங்கம் பகுதியில் கடந்தவாரம் தொடங்கியது. அடுத்த 10 நாட்களுக்கு ஷுட்டிங் தொடர்ந்து நடக்க இருக்கிறது.
இந்தசூழலில் பிரபாஸ், சயீப் அலிகான் ஆகியோர் நடிக்கும் `ஆதிபுருஷ்’ பாலிவுட் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நேற்று தொடங்கியிருக்கிறது. சலார் ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூல் முடிந்தவுடன் பிரபாஸ் `ஆதிபுருஷ்’ ஷூட்டிங்குக்காக மும்பை பறக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கும் மாதத்தில் 15 நாள்கள் என்கிற ரீதியில் பிரபாஸ் கால்ஷீட் ஒதுக்க இருக்கிறாராம். இதனால், ஒரே நேரத்தில் இரண்டு ஷூட்டிங்கிலும் கலந்துகொள்ளலாம் என்பது பிரபாஸின் எண்ணம். சலார் இந்த ஆண்டின் இறுதிக்குள் ரிலீஸாக இருக்கும் நிலையில், ஆதிபுருஷ் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மூன்று…
டோலிவுட்டு இயக்குனர்…
Annamalai: மிகப்பெரிய…
பிரபல துணிக்கடைக்கு…
தெலுங்கு படங்களில்…