புஷ்பவனம் குப்புசாமி மகளைக் காணவில்லை – உறவினர் புகார் !

319861598f9eea8f1c46127b749b78e4

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகளான பல்லவியை நேற்றிரவு முதல் காணவில்லை என போலிஸீல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் புஷ்பவனம் குப்புசாமி. இவரது மனைவி அனிதா குப்புசாமியும் பாடகராக இருந்துவருகிறார். தம்பதிகள் இருவரும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவர்களது மூத்த மகள் பல்லவி மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். இவருக்கும் தங்கைக்கும் நேற்றிரவு சண்டை நடந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் கோபித்துக் கொண்டு காரை எடுத்து சென்றவர் இன்னும் வீடு திருபவில்லை என குப்புசாமியின் உறவினர் கௌசிக் என்பவர் அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பல்லவியின் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் விசாரணை தாமதமாகி வருகிறது.

 

Related Articles

Next Story