கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பிஸி ஷெட்யூலில் இருப்பவர் ரகுல்ப்ரீத் சிங். கொரோனா காலத்தில் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட அவர், அந்த வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை எடுத்துக் கொண்டு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டார்.
அவர் இப்போது மூன்று பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அதுதவிர டோலிவுட்டில் ஒரு படத்தின் ரிலீஸுக்காகவும் வெயிட்டிங். ஃபிட்னெஸில் அதிக அக்கறை காட்டும் அவர் கொரோனாவை எதிர்த்துப் போராட உடற்பயிற்சி அவசியம் என்கிறார்.
சொந்தமாக ஜிம் வைத்து நடத்தும் அவர் மேலும் கூறுகையில், “கொரோனா காலத்தில் வியாபாரம் சுத்தமாகப் படுத்துவிட்டது. இருந்தாலும் என்னிடம் வேலைபார்க்கும் எல்லாருக்கும் முழு சம்பளம் கொடுத்தேன். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறோம். ஜிம்முக்கு வழக்கம்போல் கூட்டம் வருகிறது. கொரோனாவை எதிர்த்துப் போரிட உடற்பயிற்சி அவசியம். இளைஞர்கள், இளம்பெண்கள் உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்’’ என்றிருக்கிறார்.
இளையராஜா இசையில்…
சினிமாவில் இரண்டு…
கமல் -…
சினிமாவில் சிலரின்…
பெரிய பட்ஜெட்…