அரசியலுக்கு வருவேன் என அறிவித்து 2 வருடமாகியும் கட்சியின் பெயரை கூட அறிவிக்காமல் அமைதி காத்து வருவதோடு, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அவர் எப்படியாவது அரசியல் கட்சியை துவங்குவார் என அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ஏப்ரல் – செப்டம் மாதம் வரை மாநகராட்சி சார்பில் விதிக்கப்பட்ட சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதம் முதலே தனது மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எதுவும் நடைபெறவில்லை என்பதால் சொத்துவரியை ரத்து செய்ய வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ரூ.100 கோடி சம்பளம் பெறும் ரஜினி ரூ.6.5 லட்சத்தை கட்ட முடியாமல் வழக்கு தொடர்ந்திருப்பது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
முரளி நல்ல…
கைதி, விக்ரம்,…
லிங்குசாமி இயக்கத்தில்…
Actor Simbu:…
சினிவாவில் சில…