சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் ஒருபக்கம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தை ஓட விடக்கூடாது என்று ஒரு சிலர் சதி செய்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக நேற்று மதுரையில் உள்ள லோக்கல் கேபிள் டிவி சேனலில் ‘தர்பார்’ திரைப்படம் ஒளிபரப்பு பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் ‘தர்பார்’ திரைப்ப்படம் லோக்கல் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை கண்டித்து ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் லைகா நிறுவனத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது அந்த லோக்கல் கேபிள் டிவி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்
அவரிடம் தர்பார் படத்தை ஒளிபரப்ப சொன்னது யார்? என்பது குறித்தும், எப்படி பிரிண்ட் கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Jayam Ravi: ஜெயம்…
திறமையான நடிகராக…
பிரபாஸ் உடன்…
வைகை…
தமிழ்சினிமா உலகில்…