ரஜினியை வைத்து முத்து, படையப்பா, லிங்கா ஆகிய படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினிக்கு பிடித்த இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமாரும் ஒருவர். லிங்கா படம் தோல்வி அடைந்ததால் அப்படத்திற்கு பின் இருவரும் இணையவில்லை.
இந்நிலையில், தற்போது மீண்டும் அவர்கள் இணையும் செய்திகள் அடிபட்டு வருகிறது. 2014ம் ஆண்டு ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய திரைப்படம் ராணா. ஆனால், சில நாள் மட்டுமே படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்பு தளத்திலேயே ரஜினி மயங்கி விழுந்தார். அதன்பின் அவர் சிங்கப்பூர் சென்றுசில நாட்கள் சிகிச்சை பெற்று திரும்பினார்.அதன்பின் ராணா திரைப்படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், அப்படத்தின் கதையை தன்னிடம் மீண்டும் கேட்டதாக கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். எனவே, விரைவில் அவர்கள் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில்…
புதிதாக எந்த…
அரண்மனை 3…
Director Sundar…
இளையராஜா இசையில்…