பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை தட்டி விடுவார் என்ற நம்பிக்கையுடன் சென்றவர் ரம்யா பாண்டியன். முதலில் அவருக்கு அமோக ஆதரவு இருந்தாலும், சில இடங்களில் சறுக்க தான் செய்தார். அதிலும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற நடிகர் ஆரியை சீண்டியே பல நெகடிவ் விமர்சனங்களை சம்பாரித்துக் கொண்டார். தொடர்ந்து, முக்கியமான சண்டை நடக்கும் போது சிரித்து வைத்து ரசிகர்களிடம் விஷ பாட்டில் எனவும் பெயர் வாங்கி கொண்டார்.
ஒரு கட்டத்தில் அவரை வெளியேற்ற ரசிகர்கள் தயாராகும் அளவுக்கு, அம்மணி ரவுஸு அதிகமாகியது. இதை தொடர்ந்து, பிக்பாஸில் நான்காவது இடத்தை பிடித்து வெளியேறினார். ஆனால், அவருக்கு குடும்பத்தினர் இணைந்து செண்டா மேளத்துடன் வரவேற்பு கொடுத்து அசத்தினர். இதை தொடர்ந்து, ரம்யாவிற்கு நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். இதனால் அம்மணி எதற்கு எடுத்தாலும் பணம் என முடிவு செய்து விட்டாராம். அதில் மட்டுமல்லாது, இன்ஸ்டாகிராமில் கூட அம்மணி செமையாக சம்பாரித்து வருவதாக தெரிகிறது.
அவரின், இன்ஸ்டாகிராமில் எந்த பொருளையாவது ப்ரோமோட் செய்ய வேண்டும் என்றால் 10 லட்சம் பேரம் பேசுகிறாராம். ஒரு பிக்பாஸ் போய் ஜெயிக்காம வந்ததுக்கே இப்படியா என பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.
விஜயை வைத்து…
Ajith: ஒரு…
Dada: நடிகர்…
Rajinikanth: தமிழ்…
Gabriella: சன்…