உத்திர பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த கணவர் ஒருவர் தன் மச்சினியுடனான காதலுக்காக மனைவியைக் கூலிப்படை வைத்து கொலை செய்துள்ளார்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் அந்த தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாகதான் சென்று கொண்டிருந்தது; மனைவியின் தங்கை மேல் கணவனுக்கு ஆசை வரும் வரை. அத்தானின் ஆசைக்கு மச்சினிச்சியும் ஓகே சொல்ல இருவரும் திருட்டுத்தனமாக காதல் புரிந்துள்ளனர்.
ஆனால் எத்தனை நாளைக்குதான் இப்படி மறைமுகமாக காதல் செய்வது என்ற்ய் யோசித்த அவர்கள் மனைவியைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர். முதலில் வீட்டிலேயே விஷம் வைத்துக் கொலை செய்ய முயல, அந்த திட்டம் பலிக்கவில்ல. பின்னர் வீட்டுக்கு கூலிப்படையினரை அனுப்பி நகைகளைத் திருடுவது போல கொலை செய்ய சொல்லியுள்ளனர்.
அதையடுத்து போலிஸில் புகார் கொடுக்க போலிஸார் விசாரணையில் உண்மை வெளியாகியுள்ளது. போலிஸார் தங்கள் பாணியில் கணவனையும், பெண்ணின் தங்கையையும் விசாரிக்க உண்மையை ஒத்துக்கொண்டுள்ளனர். இந்த சம்பவமானது உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜாவைப் பற்றியும்…
தரணி இயக்கத்தில்…
பிக் பாஸ்…
மலையாளத்தில் இந்த…
ஐயா திரைப்படம்…