பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுன் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற பின், சமூகவலைதளங்களில் பப்ளிசிட்டிக்காக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறை சொல்லி வந்தார். குறிப்பாக, நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யை ஆபாசமாக திட்டி தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பார்த்தார்.
ஒருபக்கம் கவர்ச்சியான உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு தன்னை இண்டர்நேஷனல் மாடல் என அவரே அழைத்துக்கொள்கிறார். சமீபத்தில் கூட பிகினி உடை அணிந்து கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளானார்.
இந்நிலையில் மீண்டும் பப்ளிசிட்டி ஆசையின் உச்சத்திற்கே சென்ற மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் “தான் இறந்துவிட்தாகவும் உடல் பிரேத பரிசோதனை செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறி RIP என்று தனக்கு தானே சொல்லிகொண்டுள்ளார். இதையடுத்து தற்ப்போது மீரா மிதுனின் தயார் பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு தன்னுடைய மகளை காணவில்லை எங்கு சென்றால் என்று கூட தெரியவில்லை என கூறி கதறி அழுதுள்ளார். இதனால் உண்மையிலே மீரா உயிருக்கு ஏதுனும் நடந்திருக்குமோ என சந்திக்கப்படுகிறது.
Manjummel boys:…
'அரங்கேற்றம் லலிதா'…
தமிழ் சினிமாவில்…
தமிழ் சினிமாவில்…
Vijay Antony:…