More

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரித்திகா சிங் – வெற்றியை கணித்த கோலிவுட்!

அதேபோல், தன்னுடைய படத்திற்கான தலைப்பையும் வித்தியாசமாகவே தேர்வு செய்து ஹிட் கொடுப்பவர். அந்தவகையில் கடந்த 2016 ஆண்டில் இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான “பிச்சைக்காரன்” தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

Advertising
Advertising

இதையடுத்து 4 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ஆனால் இந்த படத்தை சசி இயக்கவில்லை மாறாக  தேசிய விருது பெற்ற ’பாரம்’ திரைப்படத்தை இயக்கிய பெண் இயக்குநர் பிரியா கிருஷ்ணமூர்த்தி இயக்க உள்ளார்.  சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆம், இப்படத்தில் தற்போது கதநாயகியாக நடிகை ரித்திகா சிங் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு ரித்திகா சிங் இந்த படத்தில் நடிப்பதால் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளது. எனவே நிச்சயம் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மாபெரும் வெற்றி பெரும் என நம்பிக்கை  தெரிவிக்கிறது கோலிவுட்.

Published by
adminram

Recent Posts